ஒரு
தொட்டியில் நல்ல வளமான மண்ணை இட்டு நிரப்பி துளசியையும், தொட்டால்
சிணுங்கியையும் அருகருகே வைத்து தோட்டத்திலோ, மாடியிலோ அதிகம் நடமாட்டம்
இல்லாத இடத்தில் வைத்து,
நெய் விளக்கு ஏற்றி, பூஜை செய்து 21 முறை வலம் வரவேண்டும். தினமும்
நெய்வேத்தியம் படைக்காவிட்டாலும் ஒவ்வொரு வெள்ளியன்றும். காலை மாலையில்
நீராடி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர் அல்லது பானகம்,
வெண்பொங்கல் வைத்து பூஜை செய்து வா. தினமும் குளித்து விட்டு விளக்கேற்றி
21 முறை வலம்வருவதை மறக்காதே. இதை நம்பிக்கையோடு தவறாமல் செய்து வந்தால்
உன் பிரச்சனைகள் நீங்கும் என்றார். நீங்க வேற துளசிதான் எங்க வீட்ல
எப்பவும் இருக்கே, என்றேன். இருக்கும், தொட்டால் சிணுங்கி இருக்காது.
அதுதான் துளசியின் கணவனான ஜலந்திரன் என்கிற அசுரன். ஈஸ்வரனிடம் அழியாத
வரங்களைப் பெற்றவன். தேவலோகத்தையே அழித்து நாசம் செய்தவன். மனைவி மேல்
பாசம் கொண்டவன். மகா விஷ்ணுவின் தந்திரத்தால் ஜலந்திரன் தலை
துண்டிக்கப்பட்டு துளசியின் மடியில் விழுந்ததாகப் புராணம் சொல்கிறது.
துளசியின் மேல் மனமிரங்கி இருவரையும் மூலிகைகளாக வரம் அளித்து அருளியதாகச்
சொல்லப்பட்டுள்ளது. இரு மூலிகைகளுக்கும் அனேக அற்புத சக்திகளைத்
தந்தருளியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. திங்கள் பூஜை செய்து வலம் வந்தால்,
எண்ணங்கள் யாவும் ஈடேறும். ஐந்து வாரங்களில் பலன் தெரிய ஆரம்பிக்கும்.
தொடர்ந்து செய்து வந்தால் பலன் நிலைக்கும். வெள்ளி அன்று வலம் வந்தால்,
குடும்ப ஒற்றுமை, போக பாக்கியம், லட்சுமி கடாட்சம் யாவும் உண்டாகும்.
செவ்வாய், சனிக் கிழமைகளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும். வியாழக்
கிழமை வலம் வந்தால் விரோதிகள் வசியமாவார்கள். அந்தந்த கிழமைகளின் பலன்கள்
யாவும் சித்திக்கும். குரு எனக்குச் சொன்னார். நான் உனக்குத் தந்தேன்
அலட்சியமாக எண்ணாதே என்றார். நானும் சரி என்று சொல்லி விட்டேன். அவரும்
விடை பெற்றுப் போய்விட்டார். சதுரகிரி மலைக்குப் போகிறோம், நம் காலடியில்
எத்தனையோ மூலிகைகள் படுகின்றன. ஆனால் அவைகளுக்குள்ளே எத்தனையோ அபூர்வ
சக்திகள் ஒழிந்து கிடக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். முதலில்
இதெல்லாம் ஏமாற்று வேலை என்றுதான் நினைத்தேன். எனக்கு மிகவும் நெருங்கிய
பழைய சட்ட மன்ற உறுப்பினரும், வக்கிலுமான ஒரு சகோதரர் வெளியூருக்கு போகும்
போதெல்லாம் காரை நிறுத்தி பல மூலிகை அற்புதங்களைச் செய்து காட்டுவார். நான்
பிரமித்து விடுவேன். ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி எடுத்து வா, என்பார்.
எடுத்து போனால் ஒரு செடியின் இலையைப் பிழிந்து சில துளிகளை அந்த தண்ணீரில்
விடுவார். சில நொடிகளில் அந்தத் தண்ணீர் ஐஸ் போல வெள்ளையாக கட்டியாக
ஆகிவிடும். நானும் தண்ணீரைப் போல உறைந்து போய் வாயைப் பிளப்பேன். ஒரு
மூலிகையின் வேரை நன்றாக மென்று சவைத்துத் துப்பச் செய்வார். பிறகு ஒரு
கல்லைக் கொடுத்து கடிக்கச் சொல்வார். கல் தூள் தூளாகிவிடும். நம் பல்லுக்கு
ஒன்றுமே ஆகாது. இப்படிப் பலப்பல விந்தைகளை நேரில் அனுபவித்திருந்ததால்,
இவர் சொன்னதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை. அப்படி தொட்டால் சிணுங்கி
செடியில் என்னதான் இருக்கிறது என்று ஆராயப் போனால் அதில் பல விஷேசமான
சக்திகள் சொல்லப்பட்டுள்ளன. அது மின் சக்தி உள்ள ஒரு மூலிகை என்றும், அதை
ஒரு மண்டலம் தினமும் தொடுபவன் மன ஆற்றல் பெருகும் என்றும், சொன்னது
பலிக்கும், நினைத்தது நடக்கும் என்றும், ஆன்மையைப் பெருக்கும், சிற்றின்ப
ஆசையைத் தூண்டும் என்றும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகிய மூலிகை
என்றும், மந்திர சக்தி உடையது என்றும் பல விஷேச சக்திகள் சொல்லப்பட்டுள்ளன.
துளசி வெப்ப மூட்டும், இது வெப்பத்தை குறைக்கும். துளசி மின்சாரத்தில் அடி
பட்டவர்களைக் காக்கும், இது மின் சக்தியைத் தூண்டும் இப்படி ஒன்றுக்
கொன்று எதிர் இயக்கங்களைக் கொண்ட பெண்பால் ஆண்பால் மூலிகையான கணவனும்
மனைவியுமாக துளசியும், தொட்டால் சிணுங்கியும் திகழ்கிறது. இத்தனை இலட்சம்
மூலிகைகளில் இவை இரண்டிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை சித்தர்கள்
எப்படித்தான் கண்டுபிடித்தனரோ என்று ஆச்சர்யம் தோன்றுகிறது. இதில் இனியும்
ஒரு விந்தை என்ன வென்றால் பெண்பாலான துளசி சூரியனின் அம்சம். ஆண்பாலான
தொட்டால் சிணுங்கி சந்திரனின் அம்சம். நம் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன்
ஆண்பால், சந்திரன் பெண்பால். மூலிகையில் அந்த சூக்குமம் அப்படியே மாறி
நிற்கும் காரணத்தை சித்தர்களே அறிவார்கள்.
No comments:
Post a Comment